பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை.! பெற்றோர் உட்பட 3 பேர் கைது.!

Default Image

உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இந்த குழந்தை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி உயிரிழந்தாக கூறி, வீட்டின் முன்பு பெற்றோர் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமுற்ற கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிறந்து 31 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை, பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்துள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்த கொலை செய்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்