கணவனின் நண்பனுடன் உடலுறவு கொண்ட பெண்மணி!தற்கொலை செய்த சம்பவம்!

Default Image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதிக்கு அருகே உள்ள நம்மகுளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுடர்மணி.இவரது மனைவி சங்கீதா.இவர் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் வேலைபார்த்து வருகிறார்.

இருவருக்கும் குழந்தை இல்லை.இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவர் சுடர்மனியுடன் ஒரே இடத்தில் வேலைபார்த்து வந்துள்ளார்.இருவரும் நண்பர்கள் என்பதால் ஒருவரை பார்க்க ஒருவரின் வீட்டிற்கு ஒருவர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சுடர்மணியின் வீட்டிற்கு சரவணன் செல்லும் போது சங்கீதாவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சரவணன் மதுவை வாங்கி கொண்டு சுடர்மணியின் வீட்டிற்கு சென்ற ஊத்தி கொடுத்து அவரை போதையாக்கி தூங்க வைத்துவிட்டு சங்கீதாவுடன் உடலுறவு கொண்டுள்ளார்.

அதை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்துள்ளார்.இந்த விஷயம் சுடர்மனிக்கு தெரிந்தவுடன் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு,சங்கீதா தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் சரவணன் சங்கீதாவுக்கு தெரியாமல் எடுத்த புகைப்படத்தை கொண்டு சங்கீதாவிடம் தாம் சொல்லுவதை கேட்காவிடில் இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

அதில் இருந்து ஒரு புகைப்படத்தை சங்கீதாவின் உறவினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.அந்த உறவினர் அதை பார்த்துவிட்டு சங்கீதாவிடம் கேட்டுள்ளார்.இதனால் வேதனையடைந்த சங்கீதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்