முதல் இரண்டு கணவரையும் பிரிந்து மச்சினனுடன் ‘பலே’ தொழிலில் ஈடுபட்ட பெண்!

Default Image
  • அம்பத்தூர் பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 
  • இதில் சிசிடிவி கட்சி மூலம் ஆராய்ந்து ரேவதி என்கிற பெண்ணை அவரது மச்சினனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையை அடுத்த அம்பத்தூரில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுவந்துள்ளன. அதனை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஒரு ரெயின் கோட் போட்ட ஒரு ஆள் செயின் பறிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து விசாரித்து வரும்போது ஒரு வண்டியில் ரேவதி மற்றும் அவரது மச்சினன் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வந்த வண்டியும், அவர்கள் அணிந்திருந்த நகையும் சிசிடிவி காட்சிகளோடு ஒத்துபோய் இருந்தது.

அதனை தொடர்ந்து வந்த விசாரணையில், ‘ ரேவதி தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இரண்டாவது கணவரையும் பிரிந்து முதல் கணவர் மச்சினனுடன் இணைந்து இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.’ இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்