அரியலூர் மாவட்டம் அருகே பெண் கொடூர கொலை ..!

Default Image

அரியலூர் மாவட்டம் திருமானூர் கீழக்கரை நகரில் வசித்து வருபவர் காமராஜர் . இவரது மனைவி மலர்க்கொடி காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் மேலும் மலர்கொடி தனது மகன் கலைவாணனுடன் தனியாக வசித்து வந்தார்.

மலர்கொடி மாடுகளை வளர்த்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விற்று வந்தார் மார்கொடி மகன் கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மேலும் நேற்று இரவு முன்தினம் கலைவாணன் காய்கறி லோடு ஏற்றுவதற்காக திருச்சிக்கு சென்று உள்ளார் .

மேலும் மலர்க்கொடி மட்டும் வீட்டில் தனியா தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவரிடம் பால் வாங்கும் பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்க்கும் பொழுது மலர்க்கொடி கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் உடனடியாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மலர்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் இந்த கொலையை செய்தார்கள்  என்று மிகவும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்