தமிழகத்தில் ரூ.56,229.54 கோடி முதலீட்டில் 1,74,999 பேருக்கு வேலை வாய்ப்பு -தமிழக அரசு..!

Published by
murugan

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு வருகிறது. இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.56,229.54 கோடி எனவும், 1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம், அதாவது 2021-22, இன்றைய நாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது. இவற்றில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 56.229.54 கோடி ரூபாய் மற்றும் வேலைவாய்ப்பு 1,74,999 நபர்கள் ஆகும்.

இந்த முதலீடுகள் எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழிற் பூங்காக்கள் வர்த்தகக் கிடங்கு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், இந்த முதலீடுகள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

36 minutes ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

1 hour ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

2 hours ago

இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…

3 hours ago

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

3 hours ago

“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…

4 hours ago