மீண்டும் ஊரடங்கா? கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருமணங்கள், பிறந்தநாள் விழா, இறுதி சடங்கு போன்றவைகள் நோய் பரவ காரணமாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. பொது மக்களிடையே பெரும் கொரோனா பரவாது என்று அலட்சியம் இருக்கிறது.

அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனுமதி வழங்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சவாலாக உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 16 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 20 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. நோய் தொற்று குறைவாக உள்ளவர்கள் வீட்டு தனிமை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

5 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

7 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

10 hours ago

தேடி சென்ற பிரித்வி ஷா! பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற டெல்லி உரிமையாளர்கள்!

டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…

10 hours ago

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…

11 hours ago

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

12 hours ago