பள்ளிகள் திறப்பில் மாற்றமா? கல்வித்துறை அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை.!

Default Image

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர்கள் முதல்வர் பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்று பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் மூலம் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அறிவித்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்