அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்..!

Published by
Edison

ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகப்படுத்தபடுமா?,என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவுற்ற  நிலையில்,தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,”திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரவுள்ளது”,என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து,”கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

மேலும்,ஓராண்டாக வேலையின்றி உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல் வருகிறது.இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுக்கப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Recent Posts

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்! 

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

15 minutes ago

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

22 minutes ago

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

39 minutes ago

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

2 hours ago

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

2 hours ago

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

3 hours ago