அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களில் நாள்தோறும் தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது.
நேற்று 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பரிசோதனைகள் அடிப்படையில் மேலும் 2,000 அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்தார். எனவே தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. சென்னையில் போதுமான படுக்கை வசதிகள் இருப்பதால் மக்கள் கவலை கொள்ள தேவையில்லை.
அதோல் 100% தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் பொருளாதார பாதிப்பும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.
மேலும், விதிமீறலில் தொடர்ந்து ஈடுபட்டால் அபராதம் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…