தமிழ்நாடு

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா (வயது 102) நேற்று முன்தினம் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் தமிழகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டையும் போற்றும் வகையில், சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் தோழர் என்.சங்கரய்யாவின் உருவப் படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் அரசியலிலும், சுதந்திர போராட்டத்திலும் பெரும் பங்காற்றிய சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? என செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் மோடியை பதற வைத்த AI – DeepFake டெக்னலாஜி.! விவரம் இதோ…

இதற்கு அவர் கூறுகையில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ அதற்கான நடவடிக்கை எடுப்போம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.

இதனிடையே பேசிய அமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலை முடக்குவது தான், அவர்களின் குறிக்கோளாக உள்ளது. மின்சார கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டணம் உயர்வால் பல தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

என் வீட்டில் 3,000 ரூபாய் வந்த கரண்ட் பில் இப்போ 10,000 ரூபாய் வருது. ஏழை மக்கள் வீட்டில் 300 ரூபாய் 3000 ரூயாய் ஆகிவிட்டது என தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான வேலை நடக்கவில்லை. சட்டமன்றத்தில் இளவரசர் பட்டத்தரசர் அல்லது போலி திராவிட மாடலை துதி பாடுவது தான் நடக்கிறது என விமர்சித்தார்.

மேலும், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் தான். அப்போது காலை உணவுத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நகராட்சிக்கு அனுப்பி வைத்தது அவர்தான். இப்போது ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, ஸ்டிக்கர் ஓட்டும் வேலையை விட்டுவிட்டு, எதாவது ஆக்கபூர்வமான வேலை செய்ய வேண்டும் எனவும் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

29 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

35 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

52 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago