பாஜகவுடன் கைகோர்ப்பாரா ஓபிஎஸ்? இன்று ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அதிமுக விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கைகோர்க்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுழலில் இன்று மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தங்கள் அணியை ஏமாற்றிவிட்டதாக ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை தாங்கி பிடித்து ஒத்துழைப்பு தந்தாக ஓபிஎஸ் எண்ணுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. உலக அளவில் மோடியின் புகழ் உயர்ந்திருக்கும் நிலையில் தேசிய அளவில் அவரை தவிர நல்ல பிரதமர் சாய்ஸ் இல்லை என கருதுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எந்த காரணமும் இல்லாமல் பாஜகவை இபிஎஸ் தூக்கி எரிந்து விட்டதாகவும் ஓபிஎஸ் கருத்து சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேண்டாம் என்றும் சொல்லும் வரை அவர்களுடன் பயணம் தொடரும் என ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதிமுகவின் பெரும்பான்மை நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருக்கும் நிலையில், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-யுடன் பயணிக்க போவதாக தினகரனும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சுழலில் இபிஎஸ் அணி விலகியதை அடுத்து, பாஜகவுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தரப்பு இனி பாஜக பக்கம் போக வேண்டாம் என்பதில் உறுதி காட்டுகிறது. எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பாஜகவின் அடுத்தம் திட்டம் குறித்து ஆலோசிக்க விரைவில் டெல்லி செல்ல உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக நிலவரம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பாஜக தேசிய தலைமையிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளிக்க உள்ளார்.  இது தொடர்பான முடிவு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

1 hour ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

4 hours ago