மே 2-ம் தேதிக்கு பின் கமல் பிக்பஸ்ஸில் வர தொடங்குவார்..? -வானதி சீனிவாசன் விமர்சனம்..!

Default Image

மே 2-ஆம் தேதிக்கு பின்னர் புதிய படத்தில் நடக்க தொடங்குவார் அல்லது அடுத்த பிக்பஸ்ஸில் வர தொடங்குவார்..? என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடவுள்ளனர். இதனால், கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இன்று வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, வானதி சீனிவாசன் கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன். டிவி ஸ்கிரீனில் தினமும் வந்துட ஒட்டு கிடைக்காது. அதனால், மரியாதைக்குரிய அன்பு சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் விரைவில் ஏப்ரல் 6 அல்ல மே 2-ஆம் தேதிக்கு பின்னர் புதிய படத்தில் நடக்க தொடங்குவார் அல்லது அடுத்த பிக்பஸ்ஸில் வர தொடங்குவார்..? என விமர்சனம் செய்துள்ளார்.

வருகின்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்