தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டாததால் துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக துணை பொதுச்செயலாளர்.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு தொகுதிகள் பங்கிடுவதில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது.
தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அதிமுகவிற்கு, தேமுதிகவிற்கும் இடையே நடைபெற இருந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
எதிர்பார்த்த தொகுதிகளை அதிமுக ஒதுக்காததாலும், உரிய அங்கீகாரம் வழக்காததாலும் தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தேமுதிக சுதீஷ், துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…