தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுமா.?

Published by
Ragi

மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசும் பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட்  31  ஆம் தேதியுடன் உடன் முடிவடையும் நிலையில் நேற்றைய தினம் நான்காம் கட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், இபாஸ் நடைமுறை ரத்து என்றும், திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தும், மக்கள் மாநிலத்திற்குள் சென்று வர எந்த கட்டுபாடும் விதிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை அடுத்து மாநில அரசும் மெட்ரோ சேவைகளை துவங்கவும், இபாஸ் முறையை ரத்து செய்யவும், பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கவும், ஞாயிறன்று விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை ரத்து செய்யவும் ஆகிய தளர்வுகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago