துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவராத்திரி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆயுத பூஜைக்கு வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி, அன்னை சக்தியின் அருள் வேண்டி, தொழில்வளம் பெருகிட தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும், புத்தகங்களையும் இறை பொருளாகக் கருதி வழிபடும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான ஆயுத பூஜை திருநாளையும்,தொடங்கும் நற்காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கலை, கல்வி, தொழில் போன்றவற்றை தொடங்கும் வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளையும் கொண்டாடி மகிழும் அனைத்து மக்களும் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…