தொடங்கும் நற்காரியங்கள் வெற்றி பெறும் …!துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து…!

Default Image

துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவராத்திரி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆயுத பூஜைக்கு வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில்,  செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி, அன்னை சக்தியின் அருள் வேண்டி, தொழில்வளம் பெருகிட தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும், புத்தகங்களையும் இறை பொருளாகக் கருதி வழிபடும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான ஆயுத பூஜை திருநாளையும்,தொடங்கும் நற்காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கலை, கல்வி, தொழில் போன்றவற்றை தொடங்கும் வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளையும் கொண்டாடி மகிழும் அனைத்து மக்களும் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்