பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வெட்டி கொன்ற மனைவியின் தம்பி!திடுக்கிடும் தகவல்!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் என்ற இடத்தில் வட்டார வள மையத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.அந்த பள்ளியில் வடிவேல் முருகன் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருமணம் ஆகியுள்ளது.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர்.அப்போது அவருக்கும் வேறு ஒரு பெண்ணும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை தெரிந்து கொண்ட அவரின் மனைவியின் தம்பி அற்புத செல்வம் என்பவர்அவரை பலமுறை எச்சரித்து உள்ளார்.ஆனால் முருகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தொடர்ந்து அந்த பெண்ணுடனே பழகியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் வடிவேல் முருகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.அப்போது பள்ளி வளாகத்தில் தனிமையில் வடிவேல் முருகன் நின்றுகொண்டிருந்ததை பார்த்த செல்வம் முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் வடிவேல் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்