திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாபுரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி பஞ்சவர்ணம்.இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளன.இந்நிலையில் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் வாக்குவாதம் விரிவடைந்து பெரிய மோதலாக மாற ஆத்திரம் அடைந்த மனைவி பஞ்சவர்ணம் ஊதுகுழலை வைத்து கணவனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி கீழே விழுந்துள்ளார் முருகேசன்.உடனே பஞ்சவர்ணம் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க ,அவர்கள் வருவதற்குள் பஞ்சவர்ணம் தலைமறைவாகியுள்ளார்.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் தப்பி சென்ற மனைவியை வலை வீசி தேடிவருக்கின்றனர்.மேலும் மனைவியே கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியினிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…