திருமணமாகி 20 நாட்களில் கணவனை தீவைத்து எரித்த மனைவி!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை மதுபோதையில் சேதுபதி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் வீடு முழுவதும் மளமளவென தீப்பிடித்து எறிந்துள்ளது.அப்போது உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி பதறி எழுந்து கூச்சலிட்டுள்ளார்.அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து ஓடி வந்துள்ளனர்.

அப்போது அங்கு வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அதற்குள் வீடு முழுவதும் தீப்பரவியுள்ளது.உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடைப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்துள்ளனர்.ஆனால் அதற்குள் சேதுபதி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து திண்டிவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் சேதுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தீவிபத்து ஏற்பட்டபோது முருகவேணி வீட்டில் இல்லாததை உறுதி செய்த காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது திருமணம் ஆகிய நாளிலிருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் முருகவேணியின் மீது சேதுபதிக்கு சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேணி சேதுபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் உறங்கிக்கொண்டிருந்த சேதுபதியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பத்த வைத்து விட்டு வெளியே கதவை மூட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனை காரணமாக காவல்துறையினர் முருகவேணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago