சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் சின்னதண்டா சிஎஸ் காலனியை சேர்ந்தவர் தீபக். 24 வயதாகும் இவர் கொளத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேதவல்லி என்னும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
வழக்கம்போல வேதவல்லி தீபக்கை வேலைக்கு அனுப்பிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலாரம் சத்தம் கேட்க, அங்கிருந்த அவரின் பெற்றோர் வீட்டிற்குள் ஓடி வந்தனர். அப்பொழுது பார்க்கையில் வேதவல்லி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அவளின் பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடி, வேதவல்லியே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனைவியை தீக்குளித்த சம்பவத்தை அறிந்த தீபக், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கூறுகையில், வேதவல்லி நீண்ட நாட்களாக தனது சிறுநீரகத்தில் உள்ள கற்களால் பாதிக்கப் பட்டு வந்தார். தற்போது அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலைக்கு முயற்சித்த தெரியவந்துள்ளது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…