சென்னை கோயம்பேட்டையை அடுத்த நெற்குன்றத்தில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் ஆவார்.இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி காயத்ரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணாமாக வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் நாகராஜின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதில் காயத்ரிக்கும் நாகராஜனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இது நாகராஜுக்கு தெரியவந்துள்ளது.இந்நிலையில் நாகராஜ் காயத்ரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.பின்னர் மகேந்திரனையும் கொலை செய்து விடுவதாக எச்சரித்துள்ளார்.இந்த தகவல் மகேந்திரனின் மனைவி பானுவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் காயத்ரியும் பானுவும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலைவாணியால் முகத்தையும் அளித்தியும் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் காயத்ரியையும் மகேந்திரனின் மனைவி பானுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…