ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும். எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது. தாடி கூட வைத்துள்ளேன் என்று நக்கலாக தெரிவித்தார். ஒரு சீட்டு இரண்டு சீட்டுகள் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரத்குமார் மக்களுக்காக தான் சட்டங்கள் இருக்க வேண்டும். அவர்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தவறு இல்லை என்றும், சட்டத்திலுள்ள பயன்களை எடுத்து விபரமாக விவசாயிகளுக்கு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…