#BREAKING : இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? – உயர்நீதிமன்றம்

Default Image

நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம்முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் விளக்கத்திற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மலை பிரதேசங்களில் மது பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியரும். டாஸ்மாக் மேலாளரும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்