மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது,ஒரு வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்:”முறைகேடு பிரச்சனையால் தேர்தலே ரத்து செய்யப்படும்போது,இந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்,ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்துக்குத் தரப்படும் பாதுகாப்புகளை,பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்? என்றும்,முறைகேடு செய்த தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு பகுதியினர் சரியாக இரண்டு தேர்வு மையங்களை தேர்வு செய்தது எப்படி?,16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 118 பேர் மட்டும்தான் குரூப் 4 போட்டித்தேர்வில் தவறு செய்தவர்களா? என்றும் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து,குரூப்-4 முறைகேடு மிகப்பெரிய மோசடி,எனவே,இது தொடர்பான விசாரணையை வேரிலிருந்து தொடங்க வேண்டும்.அதேபோல, டி.என்.பி.எஸ்.சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை.இதற்காக,சரியான பொறுப்புகளில் சரியான,நேர்மையான நபர்கள் நியமிக்கப்படும்போது தவறுகள் தவிர்க்கப்படும்”,என்று கூறி சிபிஐக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…