“ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகன பாதுகாப்புகளை,குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

Published by
Edison

மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில்  திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது,ஒரு வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.

மேலும்,இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்:”முறைகேடு பிரச்சனையால் தேர்தலே ரத்து செய்யப்படும்போது,இந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்துக்குத் தரப்படும் பாதுகாப்புகளை,பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்? என்றும்,முறைகேடு செய்த தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு பகுதியினர் சரியாக இரண்டு தேர்வு மையங்களை தேர்வு செய்தது எப்படி?,16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 118 பேர் மட்டும்தான் குரூப் 4 போட்டித்தேர்வில் தவறு செய்தவர்களா? என்றும் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து,குரூப்-4 முறைகேடு மிகப்பெரிய மோசடி,எனவே,இது தொடர்பான விசாரணையை வேரிலிருந்து தொடங்க வேண்டும்.அதேபோல, டி.என்.பி.எஸ்.சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை.இதற்காக,சரியான பொறுப்புகளில் சரியான,நேர்மையான நபர்கள் நியமிக்கப்படும்போது தவறுகள் தவிர்க்கப்படும்”,என்று கூறி சிபிஐக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை  தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

 

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago