வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது?

Published by
murugan

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என மனுதாரர் கோரிக்கை வைத்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக இயற்றப்பட்டதாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.  சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் நடைபெற்றது.  சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் இந்த வழக்கு எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்கக்கூடாது..? வழக்கு நிலுவையில் உள்ளபோதே நியமனங்கள் நடைபெறுவதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும்.  இறுதி விசாரணைக்கான தேதியை நாளை முடிவு செய்வதாக நீதிபதிகள் சுந்தரேஷ், கண்ணம்மாள் தகவல் தெரிவித்தனர். மேலும், வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

49 minutes ago
தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

2 hours ago
கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம்…

2 hours ago
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago
லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த…

3 hours ago
VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!

VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36…

4 hours ago