வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது?

Published by
murugan

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என மனுதாரர் கோரிக்கை வைத்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக இயற்றப்பட்டதாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.  சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் நடைபெற்றது.  சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் இந்த வழக்கு எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்கக்கூடாது..? வழக்கு நிலுவையில் உள்ளபோதே நியமனங்கள் நடைபெறுவதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும்.  இறுதி விசாரணைக்கான தேதியை நாளை முடிவு செய்வதாக நீதிபதிகள் சுந்தரேஷ், கண்ணம்மாள் தகவல் தெரிவித்தனர். மேலும், வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்! 

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

15 minutes ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

2 hours ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

3 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago