டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அண்மையில் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை கட்டுப்பாட்டுடன் அறிவித்து வருகிறது. அதில் ரயில்கள், விமான சேவைகள், ஹோட்டல்கள் மதுபான கடைகள் கூட திறக்க அனுமதி கொடுத்து இருக்கும்பொழுது தட்டச்சுப் பயிற்சி மையங்கள் திறக்க அனுமதிக்கவில்லை.
எனவே அண்மையில் மதுரையை சேர்ந்த செந்தில் என்பவர் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரியும் தமிழக அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை. எனவே தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…