நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையில் நூலின் தரம் ஏன் சோதிக்கப்படவில்லை?

Published by
Rebekal

நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையில் நூலின் தரம் ஏன் சோதிக்கப்படுவதில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 250 கோடி மதிப்பில் நூல் வாங்கப்படுகிறது எனவும், இதில் தரமற்ற நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலைகளை உற்பத்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்படுகிறது எனவும் நெசவாளர்களுக்கு பயனாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நூலின் தரம் குறித்தும் முறைகேடுகள் குறித்தும் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்து பார்க்கும் பொழுது நெசவாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நூலை ஏன் தர சோதனை செய்வதில்லை என்று நீதிபதி புஷ்பா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குனர் இந்த கேள்விக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago