பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக மையம் கட்டடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதற்காக 22 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இங்கு வரக்கூடிய மக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரியாணி திருவிழாவில் சிக்கன் ரூ.50, மட்டன் ரூ.100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட வகைகளில் பிரியாணி இருக்கும் போது பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…