முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்? – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார்.  36 இஸ்லாமிய கைதிகள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக பேரவையில் இபிஎஸ் பேசினார். இந்த தீர்மானத்திற்கு ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. உள்ளபடியே இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருந்தால் ஆளுநரை சந்தித்து  அழுத்தம் கொடுக்க அதிமுக தயாரா? என பல்வேறு கேள்வி எழுப்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார். கைதிகள் விடுதலை தொடர்பான காரசார விவாதத்தினை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதாவது, இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் – இபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் சட்டப்பேரவையில் தொடர்ந்து பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி அதிமுக வெளிநடப்பு செய்தனர்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 36 இஸ்லாமியர்கள் சிறையில் வாடி வருகின்றனர். பல இஸ்லாமிய அமைப்புகள் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்னிடம் கோரிக்கை வைத்தன.

அந்த அடிப்படையில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதலமைச்சர் பதில் அளிக்கும்போது இதற்கான பதில் அளித்திருந்தால் பிரச்னை இல்லை. இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கரை என கேட்டதோடு, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்றார். இதற்காகத் தான் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது, அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம்.

சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது. சிறுபான்மையினர்கள் இன்று எங்களை சந்திப்பது திமுகவிற்கு கோபம் ஏற்படுத்துகிறது. இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன் என கேள்வி எழுப்பி விமர்சித்தார். மேலும், இஸ்லாமியர்களுக்கு பல்வேறு நன்மைகள் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 1996 திமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என குற்றசாட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

9 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

10 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

11 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

12 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

13 hours ago