ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, முதல்வர் பழனிசாமி, கொரோனாவாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, உளறல் பதிலையே அளித்து வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க தான் நீட் தேர்வு நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மதுரையில் நடந்த மாணவி தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம் என்று கூறுகிறார். நாளை தேர்வை வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி ரத்து செய்வார்கள். வருகின்ற சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்போம். தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதினால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பில் கிராமப்புற மாணவர்கள் படிக்க வழிவகை செய்தவர் கலைஞர் என்றும் 2007 ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…