50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை பேச வேண்டிய அவசியம் என்ன.? அமைச்சர் பேச்சு.!

Default Image
  • மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
  • தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

ரஜினியின் துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், பல இடங்களில் மற்றும் அரசியல் வாதிகளிடையே பெரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். பின்னர் தந்தை பெரியார் கழகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடு முற்றிகையிடப்படும் என தெரிவித்தனர். ரஜினி அண்மையில், நான் நடந்ததை தான் கூறினேன், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

மேலும், ரஜினி மீது தங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது என தெரிவித்த அவர், மாபெரும் தலைவரின் பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என தெரிவித்தார்.  அண்ணா மற்றும் கருணாநிதியுடன் இருந்த துரைமுருகன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக இருந்திருக்க வேண்டும் எனவும், ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் எப்போதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்