தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக எம்பி ஆ.சாரா சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார்.

இதனால் மக்களவையில் பாஜக – திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மக்களவையில் ஆ.ராசா பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் பிற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை ஒதுக்கியதை போல் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!

நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். வெள்ள சேதங்கள் தொடர்பான  மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையும், தமிழக அரசின் அறிக்கையும் மத்திய அரசிடம் உள்ளது. இரண்டு அறிக்கைகள் கையில் உள்ளபோதும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுக்கிறது.

தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. தமிழ்நாட்டில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடாதது ஏன் என் கேள்வி எழுப்பினார். இதுபோன்று, பாஜக அரசை குற்றச்சாட்டி டிஆர் பாலுவும் மக்களவையில் பேசினார். அப்போது பாஜக – திமுக எம்பிக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், இரு கட்சிகளிடையே கடுமையான காரசார வாதம் ஏற்பட்டது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago