எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள்?நான் என்ன தப்பு செய்தேன்?அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கேள்வி

Published by
Venu

எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் வினவியுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார்.

முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.மேலும்  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னரும் அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.பரமக்குடி சட்டமன்ற தொகுதியை கூட சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறச் செய்துள்ளோம்.எதற்காக இப்படி செய்தார்கள்? என்ன காரணம் என்றும் தெரியவில்லை.ஆட்சியில்  அமைச்சராக இருந்திருக்கிறேன்,படித்தவர்கள் அமைச்சராக இருக்கிறோம்,நன்றாக வேலை செய்கிறோம்.மக்களுடன் கலந்து ஆலோசித்து வங்கித் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுமூகமாக முடித்துள்ளோம்.எந்த பிரச்சினை இல்லாமல் முடித்துளோம்.இந்த அறிவிப்பு என்னெவற்றும் தெரியவில்லை.எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை.நான் என்ன தப்பு செய்தேன் என்றும் தெரியவில்லை.வேலூர் தேர்தலில் கூட சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.எந்த விஷயமும் செய்யவில்லை,ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை.எதற்காக இப்படி செய்தார்கள் என்றும்  தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago