நடிகர் விஜய் ,சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பின் அவர் படப்பிடிப்பிற்கு சென்றார்.நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் 10 பேர் கொண்ட பாஜகவினர் என்எல்சி 2-வது சுரங்கத்தின் முன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், விஜய் வீட்டில் நடத்த வருமான வரித் துறை சோதனைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியது.எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை. நெய்வேலியில் தடைசெய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் பாஜகவினர் போராட்டம் நடத்தினர் என்று தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…