மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜக போராட காரணம் என்ன? பாஜக மூத்த தலைவர் விளக்கம்

Default Image
  • படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் பாஜகவினர்  போராட்டம் நடத்தினர் என்று பாஜக மூத்த தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் ,சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பின்  அவர் படப்பிடிப்பிற்கு சென்றார்.நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில்  10 பேர் கொண்ட பாஜகவினர் என்எல்சி 2-வது சுரங்கத்தின் முன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், விஜய் வீட்டில் நடத்த வருமான வரித் துறை சோதனைக்கும் பாஜகவுக்கும்  எந்த தொடர்பும்  இல்லை.  வருமான வரித் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியது.எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை. நெய்வேலியில் தடைசெய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் பாஜகவினர்  போராட்டம் நடத்தினர் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்