திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? – மு.க.ஸ்டாலின்.!

Default Image
  • காவிரி டெல்டா மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.
  • அதில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பி உள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை செய்யப்படுத்துவதால் நிலவளம் , நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.இதையெடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.

அதில் தஞ்சாவூர் ,கடலூர் , திருவாரூர் , நாகை ,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சேர்க்கப்பட்டனர். இதையெடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்