சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WhoKilledShubashree

Published by
Venu

ட்விட்டரில் சுபஸ்ரீ மரணம் அடைந்ததை அடுத்து #WhoKilledShubashree என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று மாலை தனது பணியினை முடித்து கொண்டு  வந்திருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே வந்துகொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ரெடியல் சாலை வழியே வந்தபோது  அதிமுக சார்பில் சாலையின்  நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது.இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக சுபஸ்ரீ  பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது.லாரியின் முன்பக்கம் விழுந்துகிடந்த அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.லாரியின் டயர் அவர் மீது ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் விதிகளை மீறிவைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் நேட்டீசன்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சென்னை ட்ரெண்டிங்கில் #WhoKilledShubashree,#BannerkilledSubhasree,#BannerKillings என்ற ஹாஸ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த ஹாஸ் டேக்குகளில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Venu

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

1 hour ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

4 hours ago