ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது என ப. சிதம்பரம் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகசட்டமன்ற தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் உள்ளது.
எதற்கு ரூ1000, 500 நோட்டு செல்லாது என அறிவித்தார்கள்..? பின்னர் ரூ.2,000 நோட்டு அச்சடித்து ஏன் நிறுத்தினார்கள்..? மத்தியில் புதிய அரசு அமைந்து விசாரணை நடத்தினால் தெரியவரும் என தெரிவித்தார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது. மக்கள் தங்கள் வலிமையை காட்டுவார்கள். ஆர்கே நகர் தேர்தலில் பணப்புழக்கம் நடந்ததை ஒப்புக் கொண்டு தலைமை தேர்தல் ஆணையர் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுத்தார்..? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிதியமைச்சர் உரையில் பதிலில்லை என கூறினார்.
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…