தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – தமிழக அரசு
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். அதுபோல சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம். கொரோனா சோதனை முடிவில் பாசிட்டிவ் என்று தெரிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். நெகட்டிவ் என்று தெரிந்தால் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டு 3 நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை.
மேலும், ஒரு மண்டலங்களுக்குள் வாகனங்களில் பயணிக்க இ- பாஸ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்துக்கு செல்வதற்கு இ- பாஸ் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்திற்கு செல்ல இ- பாஸ் அவசியம் தேவை என்றும் மண்டலங்களுக்குள் இடையே பயணிப்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…