அதிமுகவுக்கு யார் தலைமை ? – ஓபிஎஸ்,ஈபிஎஸ் தனித்தனியே அவசர ஆலோசனை!

Published by
Edison

வரும் 23-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து,அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “இந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒன்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகள் என அனைவரும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என்றும் வலியுறுத்தினார்கள்.ஒன்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும்.அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே,அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்கள் குறை எழுப்பி வரும் நிலையில்,மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.இதனால்,அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் உள்ள இல்லத்தில் 2வது நாளாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது தொடர்பாக மறுபுறம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.அதன்படி,சென்னையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,வேலுமணி,விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

 

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

26 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

29 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago