போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும். – சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு இம்மாத இறுதி வரையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு அவர் பேசுகையில், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.
மேலும், போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி தரப்படும் எனவும் கூறினார்.
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…