Congress Candidate Jothimani [File Image]
Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார்.
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் .
அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது . இந்த தொகுதியில் நான் என்ன செஞ்சேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால் அதனை செஞ்சேன், இதனை செஞ்சேன் என நான் கூறவில்லை. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்.
நான் 4 வருடம் 9 மாதங்கள் எம்பியாக இருந்துள்ளேன். எப்போதும் பணி முடிய இரவு ஆகிவிடும் நம்ம ஊருக்கு வருவதற்கு. அப்போ அப்பா இருப்பாங்க என கூறிவிட்டு தனது தாயை நினைத்து அழுவிட்ட்டார். உடனே, அங்கிருந்த மக்கள் நீ அழுகாதம்மா, அதான் நாங்க இருக்கோம் என ஆறுதல் கூறினர்.
பின்னர் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு, நீங்க தான் எனக்கு குடும்பம் மாதிரி இருந்திருக்கீங்க என கூறிவிட்டு, தனது பிரச்சாரத்தை அப்படியே நிறுத்திவிட்டு சென்றார் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…