நாளை விருப்பமனு பெறப்பட்டு நாளை மறுநாள் நேர்காணல் செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதைதொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 57 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதியான நிலையில், மீதமுள்ள இரு தொகுதிகளை இறுதி செய்ய ஐயூஎம்எல் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஐயூஎம்எல் சார்பில் வாணியம்பாடி, ஆம்பூர் இரு தொகுதிகள் கேட்கப்பட்டாகவும் அதில் வாணியம்பாடி கிட்டத்தட்ட உறுதியானதாக ஐயூஎம்எல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாங்கள் கேட்டது கிடைத்திருக்கிறது. இதனை அறிவிக்கக்கூடிய பொறுப்பை ஸ்டாலின் செய்வார். மேலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. நாளை விருப்பமனு பெறப்பட்டு நாளை மறுநாள் நேர்காணல் செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…