எடப்பாடி பழனிசாமியை கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

Default Image

எடப்பாடி பழனிசாமியை கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தை கூட கண்டுபிடிக்க முடியாத பழனிசாமியை நிச்சயம் கடவுள் தண்டிக்க தான் போகிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம், பொள்ளாச்சி பாலியல் குற்றம், நீட் மரணம் போன்ற பாவங்களுக்கு எடப்பாடி பழனிசாமியை கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்