சட்டப்பேரவைக்கூடம் எங்கு நடைபெறும் ? சபாநாயகர் தனபால் விளக்கம்

Default Image

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிரியாது.இதனிடையே செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும்.இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடு? செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் கலைவாணர் அரங்கை சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை.கலைவாணர் அரங்கத்தை  ஆய்வு செய்துள்ளோம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்