தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது முதலே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு தளர்வுகளாக தமிழக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளதுடன், கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை மீன்வளம் மற்றும் கால்நடை சார்ந்த அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை முதுநிலை வகுப்புகளும் ஏழாம் (07.12.2020) தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் புதிதாக மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி 01.02.2021 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதுடன், அப்பொழுது அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…