மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது.
மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது என்றும் இது 12 முதல் 14 வரை வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த மருந்தில் தீநுண் கிருமிகளை கொல்லக்கூடிய சக்தி உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த இம்ப்ரோ சித்த மருந்தை தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவக்குழு பரிசோதனை செய்துள்ளது. இதில் வைரஸ் கிருமியை அழிப்பதற்கான எதிர்ப்பு சக்தி இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசிற்கு இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசிடம் இந்த இம்ப்ரோ சித்த மருந்தை வைராலஜி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு டாக்டர் சுப்பிரமணியன் 1 வருட காலமாக போராடி வருகிறார்.
இது தொடர்பாக சட்ட ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்த இம்ப்ரோ மருந்தின் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்திக்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத லேகியத்திற்கு 2 நாட்களில் அனுமதி வழங்கிருக்கிறது மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவக்குழு ஆனால் தமிழத்தில் டாக்டர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்திற்கான அனுமதியை வழங்குவதை மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வேதனையை அளித்து வருகிறது.
இம்ப்ரோ மருந்தின் பரிசோதனைக்காக மத்திய அரசு கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்க வேண்டியும் டாக்டர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…