நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்று சீமான் பேச்சு.
தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் முகா ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதற்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்றும் வேறு பாடல் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முழு தமிழ்தாய் வாழ்த்து பாடலையும் பாஜக கொண்டுவர சொன்னால், அதனை பாராட்டத்தான் வேண்டும் என்றும் கூறினார். சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று கூறினார்கள். தற்போது திமுக பாஜகவுக்கு உள்ள சென்றுவிட்டது என விமர்சித்தார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக திருவாரூரை சேர்ந்த குமார் என்ற இளைஞரை வாழ்நாள் தந்தையுடன் நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு என்று கூறினார்.
திமுகவை தான் அதிகம் எதிர்க்கிறீர்கள் என்று விமர்சனம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அப்படித்தான் எதிர்ப்பேன், இனத்தை கொன்ற துரோகி என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கள் அண்ணனுக்கு பிடிக்காது, எனக்கு கருணாநிதியை பிடிக்காது என தெரிவித்தார்.
இதன் பின் செருப்பை தூக்கி காட்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு, செருப்பை தூக்கி காட்டுவேன் சொன்னத பெருமையா நினையுங்கள். மேடையில் இனி காலனி காட்டமாட்டேன் என்றும் திமுக தான் உண்மையில் சங்கி எனவும் கூறினார்.
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…