அதிமுக நிச்சயம் ஒன்றாக இணைந்து வெற்றிபெறும் என தஞ்சையில் சசிகலா பேட்டி.
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அருளானந்த நகரிலுள்ள இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் கொள்கையை வாயளவில் பேசிக்கொண்டு இருக்காமல், செயல்படுத்தி காட்டியவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.
அண்ணா, புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் வழியில் நாங்கள் சென்று கொண்டியிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுவோம். அதிமுகவில் நிச்சயம் ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும், தகுந்த நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என தெரிவித்தார்.
மேலும், வரும் தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும், திமுக அரசு சொன்னதை செய்யவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல, அதனை செயல்படுத்த வேண்டும். புரட்சி பயணம் செல்லு இடங்களில், திமுக அரசு எதையும் செய்யாமல் வஞ்சிப்பதாக மக்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…