தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல்!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கிய நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது.

தமிழகத்தில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனைதொடர்ந்து, தற்பொழுது முதல்கட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அந்தவகையில், அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பள்ளியிலும் பெற்றோர் தெரிவித்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது. மாவட்டங்கள் வாரியாக பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும், இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதால், அதன் அடிப்படையில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இம்மாதம் 3-ஆம் வாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

11 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

14 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

15 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

17 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

18 hours ago